தமிழ்த் திரையுலகில் 1960-ல் இருந்து 1970 வரை பிரபலமாக இருந்த பழைய நடிகைகள் அனைவரும் சென்னையில், கடந்த ஆண்டு ஒன்றாக சந்தித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்கள். அந்த சந்திப்பில் சரோஜாதேவி, சவுகார்ஜானகி, ராஜசுலோசனா, ராஜஸ்ரீ, வாணிஸ்ரீ போன்றவர்கள் கலந்து கொண்டார்கள். அதே போன்ற பழைய நடிகர்-நடிகைகளின் சந்திப்பு, சென்னையில் மீண்டும் நடந்தது. 1980களிலும், 90களிலும் பிரபலமாக இருந்த கதாநாயகன்கள்-கதாநாயகிகள் அனைவரும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டார்கள். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இயக்குநர் பிரியதர்ஷன்-லிசி தம்பதிகளின் வீட்டில் இந்த சந்திப்பு நடந்தது. நடிகர்கள் ரஜினிகாந்த், பிரபு, கார்த்திக், சுரேஷ், மோகன், அர்ஜூன், பிரதாப்போத்தன், பானுசந்தர், மோகன்லால், சிரஞ்சீவி, வெங்கடேஷ், 'ஒருதலைராகம்' சங்கர், அம்பரீஷ், நடிகைகள் லிசி, ராதிகா, சுஹாசினி, ரேவதி, ராதா, அம்பிகா, பூர்ணிமா, நதியா, ஷோபனா, குஷ்பு, ரம்யாகிருஷ்ணன், சுமலதா ஆகியோர் கலந்து கொண்டார்கள்,. இந்த சந்திப்பையொட்டி விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இரவு 9.30 மணிக்கு விருந்து தொடங்கியது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர்-நடிகைகள் அனைவரும் ஒருவரையொருவர் கட்டித்தழுவி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்கள். அனைத்து நடிகர்-நடிகைகளும் சேர்ந்து விடிய, விடிய நடனம் ஆடினார்கள். அதிகாலை 6 மணிக்கு மேல் அனைவரும் பிரியா விடை பெற்றார்கள். சிறப்பு விருந்தினராக நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் கலந்து கொண்டார். அப்ப.... ஒரே கூத்தும் கும்மாளமுமா சும்மா களை கட்டியிருக்குமே கச்சேரி.....