முதல் பக்கம் » கவிதை » புதுக் கவிதை
புதுக் கவிதை -

Tamil Poem - Tamil Kavithaigal

திருடிய கவிதை

ராசை நேத்திரன்

இயற்கையே உன்னிடம்
இருந்து தான் திருடுகிறேன்
எனது கவிதைகளை
இப்படியாய்..!

மறையும் சூரியன், அதனை
தொடாமல் தொடும்
கடல்..!

மழை நின்ற பின் 
தொடரும் ஒரு
நிசப்தம்..!

இருண்ட வானத்தில் மூன்றாம்
நாள் பிறை
நிலா..!

குளத்துக் கரையில் உணவுக்காய்
துள்ளி வரும்
மீன்கள்..!

பச்சைப்புல் வெளியின் மூடு
பனி விட்டு சென்ற
வேர்வை..!

தொடர்ந்து வரும் மேக
கூட்டங்களை குளிரச்செய்யும்
மலை..!

குளிர் காலையின் வெது
வெதுப்பான சூரியன்..!

சுடும் சூரியனுக்கு எதிராய்
நீ பொழிய செய்யும்
மழை..!

தென்றலில் இயற்கை
விட்டு செல்லும்
வாசம்..!

நீ ப(டி)டைக்கின்றாய் 
தினந்தோறும் அழகிய
கவிதைகளை எங்களுக்காய்..

புதுக் கவிதை

Site Meter